மஹாகவி பாரதியார்


தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த

வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து

காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு

கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நெஞ்சில் உரமுமின்றி

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி

வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்

செப்பித் திரிவாரடி கிளியே

செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி

வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி கிளியே

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி

வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

என்று தணியும் இந்த

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?

தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

என்று தணியும் இந்த

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

K RAJARAM IRS 26126    REPUBLIC DAY REMEMBRANCE OF A GREAT POET WHO BEGGED
THE CITIZENS; HAVE THEY CHANGED? NO

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq17R287eDjOyhd1oiCpBvBmRSd2B%3D0bMXAYOtijFE3bQ%40mail.gmail.com.

Reply via email to