Vande Mataram Enbom Lyrics in Tamil Subramanya Bharathi

வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



ஜாதி மதங்களைப் பாரோம்

உயர் ஜன்மம்

இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே

அன்றி வேறு

குலத்தினராயினும் ஒன்றே



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



ஈனப் பறையர்களேனும்

அவர் எம்முடன்

வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ

சீனத்த ராய்விடு வாரோ

பிற தேசத்தர்

போற்பல தீங்கிழைப் பாரோ



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



ஆயிரம் உண்டிங்கு ஜாதி

எனில் அன்னியர் வந்து

புகல் என்ன நீதி

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்

தம்முள் சண்டை செய்தாலும்

சகோதரர் அன்றோ



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



மேலும் கண்டறிக

தாயின் மணிக்கொடி

வந்தே மாதரம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே

நம்மில் ஒற்றுமை நீங்கில்

அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்

இந்த ஞானம் வந்தாற்பின்

நமக்கெது வேண்டும்



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



எப்பதம் வாய்த்திடு மேனும்

நம்மில் யாவர்க்கும்

அந்த நிலை பொதுவாகும்

முப்பது கோடியும் வாழ்வோம்

வீழில் முப்பது கோடி

முழுமையும் வீழ்வோம்



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்



புல்லடி மைத்தொழில் பேணிப்

பண்டு போயின நாட்களுக்கு

இனி மனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர

இந்தத் தொண்டு நிலைமையைத்

தூவென்று தள்ளி



வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை

வணங்குதல் என்போம்

வந்தே மாதரம் என்போம்

KR IRS 91225

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoofTVDE9SVN8ZUbqRjN0dF_fDiwMstBihOhMsw0Ly%3DEXw%40mail.gmail.com.

Reply via email to