A refined thought on a unique subject. I would like to add and
detail more as under:


On Fri, 10 Oct 2025 at 12:40, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> மயிலின்  தத்துவம்,
>
> முதல் மயூரம்-
> *வேத மயில்*
>
> விநாயகப் பெருமானுக்காக வேத வேள்வியிலிருந்து வெளிப்பட்ட மயில், பின்னாளில்
> முருகனுக்கு அவரால் தரப்பட்டதை விநாயக புராணத்தால் அறிய முடிகிறது.
>
> அனைத்து வேதங்களின் சாரமும் உள்ளடங்கிய பிரணவ மந்திரத்தின் பொருளாக முருகன்
> இருப்பதை உணர்த்துகின்றது. இதையே அருணகிரிநாதர் 'ஆன தனிமந்திர ரூபமயில்'
> என்கிறார். பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் முருகன் காட்சியளித்ததாக
> கூறப்படுகிறது (குக ரகசியம், தகராலய ரகசியம்)
>
> இரண்டாம் மயூரம் -
> *இந்திர மயில்*
>
> சூரனுடன் முருகன் போர் நிகழ்த்தியபோது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து
> நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் துரத்திச்
> செல்ல முருகன் எண்ணியபோது, இந்திரன் அழகிய மயிலாகி, அவரைத் தாங்கியதாக
> கூறப்படுகின்றது.
>
> இந்திரன் என்பது பல மெய்யுணர்வுகளின் தொகுப்பு (Collective Consciousness)
> நம்முள் வேகமாக தோன்றும் அசுர உணர்வுகள் எண்ணங்களுக்கு இந்திரமயில் அவசியம்😊
>
> மூன்றாம் மயூரம்-
> *சக்தி மயில்*
> பராசக்தியே மயில் வடிவம் தாங்கி குமரனுடன் ஆடி மகிழ்கிறாள். மயிலாகி இறைவனைப்
> பூசிப்பதும், குமரனோடு விளையாடுவதும் அன்னையின் கருணையைக் குறிக்கும். இதனால்
> இறைவிக்கு, `மயிலம்மை’ என்பது பெயராயிற்று. இம்மயில் முருகனைவிடச் சற்றுப்
> பெரியதாக விளங்க, முருகன் இளையவனாக அருகில் இருந்து அதை ஆரத்தழுவி மகிழ்வதாக
> கூறப்படுகிறது. (மயிலை கட்டியணைத்து கொண்டிருக்கும் முருகனை
> பார்த்திருக்கிறீர்களா?)
>
> நான்காம் மயூரம் -
> *அசுர மயில்*
> இது நாம் அனைவரும் அறிந்த
> சூரபத்மன், நம்மை வதைக்கும் அசுர குணங்கள் கந்தனின் கருணையினால் அவரை ஏந்தி
> பறக்கும் வண்ணமயிலாகும் என்பது உறுதி.
>
> இன்னும் பல மயூரங்கள் கந்தன் வசமுண்டு 😊
>
> *நாத மயில்*
> இந்த மயில் பார்வைக்குக் கிட்டாத மயில். மந்திர உபதேசத்தின்போது முருகன் இந்த
> மயில் மீதிருந்து உபதேசம் செய்கிறான். இம்மூர்த்தியை தியானிப்பது மட்டுமே
> வழக்கம். சிலையாக அமைப்பதில்லை.
>
> *ஔஷதமயில்*
>
> இதுவே நம் உடல் நோய் தீர்க்கும் ஔஷத மணியையும், ரச மணியையும் குறிக்கிறது.
> பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும்.
>
> இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல்
> மட்டுமே இருப்பதை நாம் பார்க்கலாம்.
>
> நாட்டு
> வைத்தியர்களை கேட்டால் மயில் தோகையின் அளவற்ற மருந்து பலன்களை சொல்லுவார்கள்
> 😊
>
> ஆன்ம மயில்
> முருகனின் ஆலயங்களில் கொடி மரத்துக்கு அருகே அமையும் மயிலை `ஆன்ம மயில்'
> என்கின்றனர்.
> புற அழகு நான் என்னும் கர்வத்தாலும், குலச்செருக்கு, கல்விச்செருக்கு என்னும்
> செருக்குகளாலும் களித்திருக்கின்ற ஆன்மா, இறைவனை உணர்ந்த பின்னர் அடங்கி,
> ஒடுங்கி நிற்பதையே இம்மயில் சுட்டுகிறது.
>
> இனி நாம் அனைவரும் முருகன் கோயிலுக்கு சென்றால் அங்கிருக்கும் மயில் எதை
> குறிக்கிறது என்று பார்ப்பதிலேயே நேரம் ஒதுக்கவேண்டும்😃😃
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDC%3D3FiyccjnLB7Tw3hchxUF5kzEQVM%3DfOh-3%3DC_MXxQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDC%3D3FiyccjnLB7Tw3hchxUF5kzEQVM%3DfOh-3%3DC_MXxQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopDGkrEos5iDab4SuPFK5vkv4A6ZQTB-VD3TfbhC2n4TA%40mail.gmail.com.

Attachment: Our National Bird.docx
Description: MS-Word 2007 document

  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Rajaram Krishnamurthy

Reply via email to