குப்பை கூலங்களோடு உள்ள தானியங்களை புடைத்து பிரித்தெடு என்பதே நையப்புடை மற்றும் தானியங்களின் தோலை நன்றாக நைய குத்தி (நெல்லை பிரித்து அரிசி எடுப்பது போல் ) உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது என்பதாம்.
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Wed, 16 Jul 2025 at 07:28 Subject: Fwd: Andaman Krishnamurthi To: *போ.. போய்யா... போ....!* *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி * நம்மில் சிலர் தங்களின் கணவன்மார்களைப் பற்றிக் கூறும் போது, அவரு ரொம்ப நல்லவர்தான். ஆனா கொஞ்சம் நைய நைய என்பார்கள். அது என்ன நைய நைய? தமிழ் இலக்கியத்தில் இதனை ஒட்டிய பாடல் எதாவது இருக்கிறதா? என்று செய்யறிவு (AI) அடிமையிடம் கேட்டேன். சாட்ஜிபிடி என்ற அடிமை உடனடியாக அகநானூறு, குறுந்தொகை பாடல் தந்து மகிழ்ந்தது. அந்தோ பரிதாபம். பாடலை எட்டிப் பார்த்தால் அந்த இரண்டு பாடல்களிலும் நைய என்ற சொல்லே இல்லை. சாட்ஜிபிடியிடம் தகவல் கொடுத்தவுடன், ஆமா அதில் இல்லை என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்கிறது. எனக்கு என்னமோ 'தசாவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு சொல்வது போல, அந்த கண்டெய்னரில் வயல் இல்லை என்பதைத்தானே நானும் சொல்றேன். நீ என்ன எனக்கு தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ற? என்று கேட்பதுபோல் பட்டது. (நீதி: சாட்ஜீபிடிக்கு தமிழ் சரியாக கற்றுத் தரப்படவில்லை) இதற்கும் ஒரு படி மேலே போய், ஆப்பிள் கைபேசியில் இயங்கும் மெட்டா ஏஐ, 'எனக்கு தமிழ் தெரியாது போடா' என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லி விடுகிறது. அப்படித்தான் இத்திக்காய் காயாதே அத்திக்காய் போய் காய் என்று சொல்வது போல், மழையையே திசைமாறி இங்கே பெய்யாது அங்கே போய் பெய் என்று சொல்வதாக ஒரு பாடல் வருகிறது. 'என் காதலன் சென்ற காட்டில் வெயிலின் சூடு அதிகமாய் இருக்கும். மழை மேகமே! உன்னிடம் தண்ணீர் இல்லாவிட்டால் என் கண்ணீர் வெள்ளத்தை முகந்துகொண்டு சென்று பொழிவாயாக என்கிறார் நல்லந்துவனார் கலித்தொகையில். (நையாமல் என்பது தாக்காமல் என்ற பொருளில் வருகின்றது) தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்து எரி நையாமல் , பாஅய் முழங்கி வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என் கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ, கொண்மூக் குழீஇ முகந்து? தமிழ் இலக்கியத்தின் இன்னொரு இடத்திலும் அதே போன்ற நைய என்ற சொல் வருகின்றது. (தேவாரத்தில் பல இடங்களில் வருவதையும் யாராவது சாட்ஜிபிடியிடம் சொல்லி வையுங்களேன்) இங்கும் தலைவியே பேசுகிறாள். பாலைப் பண்ணை யாழில் மீட்டிக்கொண்டிருக்கிறான் அக்கால இசைக்கலைஞர் பாணன். முன்பெல்லாம் அது இன்பம் தந்தது. போ…போ… நீ கூறும் பாட்டுக்கு உருகும் இடம் அறிந்து உன் கைவரிசையைக் காட்டு…போ. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பதில் தலைவி விரட்டும் இடம். (நையும் – செல்லும் இடம்) பாலையாழ்ப் பாண்மகனே பண்டுநின் நாயகற்கு மாலையாழ் ஓதி வருடாயோ - காலையாழ் செய்யும் இடமறியாய் சேந்தாநின் பொய்ம்மொழிக்கு நையும் இடமறிந்து நாடு. -- அந்தமான் கிருஷ்ணமூர்த்தி -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqdfE7rvccJ0RdxcZW20pKuxwi2muNHDJ_b5rU5uQEncA%40mail.gmail.com.
