AS A MATTER OF FACT, ALL ON THE EARTH ARE ONLY DISABLED; IS THERE ANY HEALTHY PERSON FIT 100%? IT IS COMPARATIVELY HEALTHY. HENCE ONLY IN VALMIKI RAMAYANAM, RAMA IS DESCRIBED SO MUCH AS PER SAMUDRIKA LAKSHANA. KR IRS 26625
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 26 Jun 2025 at 07:03 Subject: Fwd: Indira Priyadarshini - Differently Abled To: *ஊனம் * *இந்திரா ப்ரியதர்ஷிணி * *ஊனம் என்பதைப் பற்றி பலரும் பேசுகின்றனர். நாக்கில் நரம்பில்லாமல் பேசும் குரூர மனிதர் * *உள்ள நிலம் இது. ஊனம் குறித்து ஏளனம் அவச்சொல் கனிவான சொல் எல்லாம் உண்டு. ஊனம் * *என்பது ஒரு குறை என்று மனம் எண்ணினால்தான் குறை. தன் மனம். பிற மனம் எதுவும். மனம்தான்* * சத்ரு என்று பாரதி சொல்லி தன்மனப் பகையைக் கொன்று இன்புற்று இருக்கச் சொல்வான். * *ஊனமுற்றோர் என்பதை மாற்றி மாற்றுத் திறனாளிகள் என்றெல்லாம் நாமகரணம் வைத்தாலும் * *பரிதாபப் பார்வையைத் தவிர்க்க முடியாது. எங்கள் நீச்சல் பயிற்சிக்கு வரும் இளம் பெண் கால் * *பாதம் சற்றே சரிந்திருக்கும். என்ன உத்ஸாஹம் மனோ வேகம். நான் படியில் ஏறத் தயங்கி நின்றால் * *முதலில் நீளும் உதவிக் கரம் அம்மகளுடையதுதான். அவர்களுக்கு இருக்கும் அறிவு, பரிவு, திறன், * *உள்ளது கொண்டு பெரிது செய்யும் துணிவு எல்லாம் உள்ளதாகக் கொள்ளும் நமக்கு லவசேமும் * *கிடையாது. * *நமக்கு இல்லாத அவர்களுக்கு எதிலும் நிதானம் உண்டு. முயற்சி உண்டு. ஒரு வயதிற்குப் பின் * *எல்லாருக்கும் ஏதாவது ஒரு ஊனம் இருக்கத்தான் செய்கிறது. மூட்டு தேய்ந்து வலி மிகுந்து காலின் * *நடை மாறுகிறது. பலருக்கு தோள்பட்டைக்கு மேல் கரங்கள் உயர்த்த முடியாது. கழுத்து தோள்பட்டை * *வலி. சில நேரம் காலை நேரங்களில் விரலின் மென்மையான மூட்டுக்கள் மடக்கி விரிக்க வலிக்கும். * *முதுகு வலி. இடுப்பு வலி இத்யாதி. காரணமில்லாமல் ஏதோ தலைவலி இருக்கும். * *ஒன்றும் இல்லை என்றால் மனச்சலிப்பு, கடுகடு சுபாவம் இப்படி ஏதாவது ஒரு ஊனம் இருக்கும். * *இன்னும் சொல்லப் போனால் மன இயல்புகளில் உள்ள ஊனம் அவரை மட்டுமன்றி மற்றவரையும்* *பாதிக்கும். ஊடல் ஊனம் தன்னோடு நின்று விடும். * *ஊனம் என்று சொல்கையில் அதன் அளவுகோல் எங்கோ வானை முட்டுவது இருப்பது நம் * *பாரதியிடம்தான். **அவன் ஊனமொன்றறியா ஞான மெய் பூமி, வானவர் விழையும் மாட்சியார் * *தேயம் என்பான் சத்ரபதி சிவாஜி கவிதையில். முழுமையான இறை ஞானமே ஆத்ம விடுதலையே * *ஊனம் இன்மை என்பதே அவன் வரையறை.* *அப்படியானால் நம் யாருக்கும் ஊனம் இருக்கிறது. ஆனால் நம் பூமி ஊனமொன்று அறியாமல் * *வளங்களை மெய்ஞானத்தை ஞானியர் தம்மைத் தந்த வண்ணம் இருக்கிறது. இதனால் வானவரும் * *இங்கு வர விழைகின்றனர். "கானவரும் விழி எறிந்து வானவரை அழைப்பர்" என்று குற்றாலக் * *குறவஞ்சி. * *ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ஹம்ஸ சந்தேசத்தில் திருமலைப் பெருமை பற்றி* *ஸ்ரீராமன் கூறிய ஒரு வியப்பான ஸ்லோகம் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் காட்டித் தந்தார். ஹம்ஸம்* *ஸ்ரீ ராமன் சொல்படி தூது செல்லுமுன் "ஹம்ஸமே! எந்தெந்த பிரதேசம் வழியாக நீ பறப்பாய்" என்று * *ஸ்ரீ இராம பிரான் சொல்வது. ஸ்ரீ ஹம்ஸ சந்தேஸக் கிரந்தத்தின் 22வது ஸ்லோகம். "தத் ஆருடை மஹதி * *மநுஜை: ஸ்வகர்கி பி அவதீர்ணை: ஸத்வ உந்மேஷாத் வ்யபகதமித: தாரதம்மிய ஆதிபேதை : * *ஸாதாரண்யாத் பலபரிணதே: ஸங்க்கஸாே பத்யமாநாம் சத்யா காமம் மதுவிஜயிந: த்வம் ச குர்யா: * *ஸபர்யாம்".* *திருவேங்கடமலையில் சிறிது நேரம் தங்கி நீ பெருமாளை ஆராதனை செய்து செல்ல வேண்டும் என்று * *பெருமான் உபதேசம். திருமலை திவ்ய தேசம் எப்படிப்பட்டது? இந்த ஸ்லோகம் சொல்கிறது. இங்கு * *வருபவர்க்கு ஸத்வ குணம் மேல் ஓங்குகிறது. இதனால் ஒருவருக்கொருவர் தாரதம்மியம் ஏற்றத் தாழ்வு * *பார்க்கும் குணம் அறவே இல்லாது போகிறது. தரையில் இருந்து மலை ஏறிய மானுடர்க்கும் வானில் * *இருந்து கீழே இறங்கிய தேவர்க்கும் தொழும் பலனில் தாரதம்மியம் இல்லை. பலன் ஒன்றே. * *நம் மணிவாசகப் பெருமான் உறையும் திருப்பெருந்துறை அத்தகையதே. புவனியிற் பிறவாமை. இந்தப் * *பூமியில் பிறந்தார் ஊனமுறார். அதற்கும் மேலும் ஊனத்தால் வருந்துபவர் ஊனம் மாய்க்கும் சோலை திருத்தலத்திற்கு சென்று வரவும். விஜய நகர அரசர் ஊனம் மாய்த்த பிரான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி * *தன் மூன்று தம்பிகள், பிராட்டி, விநய ஆஞ்சநேயர் சகிதம் காட்சி தரும் ஊனமாஞ்சேரி * சென்று வாருங்கள். ஆயிரமாண்டு பழமை. இது பாரதி சொன்ன மெய்ஞ்ஞானபூமி அன்றோ? * *-- இந்திரா ப்ரியதர்ஷிணி * ********************************************** *ஊனமாஞ்சேரி கோதண்டராமர் கோவில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது.* *வண்டலூர் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர்.* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqPfM4mPz3yokYdpD1AhFPFjUkiZ5bzOvX_WpTQGCgA1Q%40mail.gmail.com.
