திருமழிசையாழ்வார்

February 05, 2007

[%image(20070204-thirumazhisai1.jpg|167|242|Thirumazisai)%]

நேற்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.

முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார்.
தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில்
காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து"
என்கிறார் ஒளவையார்.)

இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து,
யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.

திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும்
தேவமங்கைக்கும், திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் சுதர்சனச்
சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப்
பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச்
சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன்,
அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை
கூறுகிறது.

இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்றும், பக்திசாரர், மழிசைப்
பிரான் என்றும் அழைக்கப்பட்டார். [சில சமயம் திருமழிசை ஆழ்வாரை, திருமழிசைப்
பிரான் என்றும் சொல்லுவதுண்டு. இறைவனுக்குரிய 'பிரான்' என்ற பெயரை இவர் ஏற்று,
ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாகக் (ஆராவமுதாழ்வார் என்று)
கூறுவர். ]

திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணிகண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது
.

இவரது சீடனான கணிகண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, கச்சியை விட்டு
வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி
கொண்டிருந்த பெருமான், தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின்
சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன், இவரது
வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப்
பள்ளி கொண்டதாகக் கூறுவர்.

இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப்பாடல்கள்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய

செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.

என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே
மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய

செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.

என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.

அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது,  வளர்த்த தாயின் பாலையும் மறுத்து,
தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி
வளர்ந்தார் என்பதை

எந்தையே வினையேன், தந்த இந்தத்

     தொள்ளமுதினை அமுது செய்க என்று,

சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே

     அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்

என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.

முதல் ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் கிபி 6 நூற்றாண்டு என்பதால், அவர்களின்
பாடல்களில் காணாத அளவுக்கு மாற்று சமயங்களைக் கண்டிக்கும் இயல்பு, திருமழிசை
ஆழ்வார் பாடல்களில் காணப்பெறுவதால், அவர்கள் காலத்துக்குப் பின்னரும் திருமழிசை
ஆழ்வார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து. இவர்
காலம் கிபி 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் முன்னும் என்று கூறுவர்
( திரு. பு.ரா. புருஷேத்தம நாயுடு )

மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை
நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால்,
ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில்
போற்றியுள்ளார். ( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே
பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )

மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்

அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த

வேதச் செழும் பொருள்



என்று வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.

நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், முதலாயிரத்தில், "திருச்சந்த விருத்தம்"
இவருடையது. 120 பாசுரங்கள் கொண்டது. இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
என்னும் பாவினத்தால் அமைந்துள்ளது.

இயற்பா என்ற பிரிவில் அமைந்த 'நான்முகன் திருவந்தாதி' என்ற பிரபந்தங்கள் 96
பாசுரங்களைக் கொண்டது.

இவை வெண்பா என்னும் யாப்பினால் ஆனது.

வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்

மெய்ம்மிகுந்த திருச்சந்த  விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்

எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த
தேசிகன் குறிப்பிடுகிறார்.

"ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல்

கொண்மின் நீர்தேர்ந்து"

என்று தொடங்கி,

"இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை"

என்று திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.

இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.

மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும்
இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 )
என்றும் சிறப்பித்துக் கூறுகிறார். இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்
நாமும் அதைக் கொண்டாடலாம்.

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

[ மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் 1)  திருஅரங்கம் 2) திருஅல்லிக்கேணி 3)
திருஅன்பில் 4) திருஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திருஎவ்வுள் (திருவள்ளுர்)
6)திருகஇத்தலம் (கபிஸ்த்தலம்)7) திருக்குடந்தை (கும்பகோணம்)8) திருக்குறுங்குடி
9) திருக்கோட்டியூர்10) திருத்துவாரபதி (த்வாரகா)11) திருக்கூடல்12)
திருப்பரமபதம் 13) திருப்பாடகம் 14)  திருப்பாற்கடல்15) திருவடமதுரை (மதுரா)16)
திருவெகா (காஞ்சிபுரம் அருகில்) 17) திருவேங்கடம் ]

****   ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா   K RAJARAM IRS 22 12 24

On Sun, 22 Dec 2024 at 19:20, 'gopala krishnan' via KeralaIyers <
[email protected]> wrote:

> Sir,
>
> Before becoming Alwar the saint was Thirumahisai Nayanar as per the
> legends about Tirumazhisai Lord Siva temple.
> Gopalakrishnan
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/1721850030.2339074.1734875394413%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/1721850030.2339074.1734875394413%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqAAhRUVnR9S9KRJ6r3i1SDaXBCbq7aD5UQ4Y9TNXA4Gg%40mail.gmail.com.

Reply via email to