Vara madha idhazh and water shortage ration do not fit for computer pisasu, developments. KR IRS 15924
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sun, 15 Sept 2024 at 05:35 Subject: Fwd: Sujatha - Anna Salai 2094 To: *அண்ணாசாலை - 2094! * *(சின்னஞ்சிறுகதை)* * சுஜாதா * *கடிதத்தைப் பிரித்து படித்த டேவிட் மிக மகிழ்ந்தான் .* *மகிழ்ச்சியை உடனே மனைவியுடன் பகிர்ந்துகொள்ளவும் விரும்பினான். * *பாக்கெட் தொலைதொடர்பு சாதனத்தை எடுத்து சில பொத்தான்களை அழுத்த* *சின்னத்திரையில் தேதி மினுக்கியது . * *03-01-2094* *பிறகு அவனது குடியிருப்பு பகுதி தெரிந்தது.* *அதற்குப்பின் 1,2,3,4, -- --- -- 47வது மாடி. * *வீடு எண் 383 .* *வீட்டு வாசலில் பூட்டு. * *" மன்னிக்கவும். உங்கள் வீடு பூட்டப்பட்டிருக்கிறது . சற்று கழித்து நானே அழைக்கிறேனே! * *காலம் தண்ணீர் போன்றது. அதுவரை உங்கள் வேலையை கவனியுங்கள்." * *வேலை? அதைத்தான் இந்தக் குட்டி கம்ப்யூட்டர் பிசாசுகள் செய்துவிடுகின்றனவே .* *வார இதழைப் பிரித்தான்.* *மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை , திருச்சி எட்டிலிருந்து ஒன்பதாம் தமிழழகன் கேட்க --* *அதற்கு இன்னும் சி.நா.கா. என அரசு பதில் தந்திருந்தார்.* *இருக்கையைவிட்டு எழுந்து கீழே ஜன்னல் வழியே நோக்கினான் .* *நெட்டிலிங்க மரங்கள் குட்டைக் காளான் சைஸில் தோன்றின .* *பீப் --- பீப் --- பீப். * *தொலை தொடர்பு சாதனம் சிணுங்கி உயிர்த்தது.* *திரையில் ஞானம் அவன் மனைவி தெரிந்தாள் .* *மேனியில் வெண்ணெய் வளப்பம் . * *"தொடர்பு கொண்டீர்களாமே . எது விஷயமாக?"* *"நல்ல செய்திதான். அது சரி, நீ எங்கு போயிருந்தாய்?"* *"மறந்து விட்டீர்களா இன்று ரேஷன் கிழமை!"* *" மை குட்னஸ்! ரேஷன் கடைக்கு சென்றிருந்தாய் அல்லவா? எவ்வளவு கிடைத்தது?"* *" வழக்கமான ஐந்து லிட்டர்தான் . உங்க அப்பா அம்மா பெயர்களை சேர்த்திருந்தால் இன்னும் இரண்டு லிட்டர் தண்ணீர் அதிகமாக கிடைத்தி**ருக்கும். "* *" இறந்து போனவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது பாவமில்லையா?"* *"பாவ புண்ணியத்தைப் பார்த்தால் மாதத்துக்கு இரண்டு தடவைதான் குளிக்க முடியும். என் வாயைக் கிளறாமல் நீ சொல்ல வந்ததை சொல்"* *"அண்ணாசாலைக்குச் செல்ல நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது !"* *" வா-- வ் ! நம்முடைய நீண்ட நாள் கனவு . என்றைக்கு ?" * *"14-01-2094 அன்றைக்கு!".* *"அன்றைக்கு தமிழர் திருநாள் அல்லவா ?"* *" ஆம். அதனால்தான் கொஞ்சம் அதிகமானவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது . பை-- மாலையில் பேசுவோம்".* * **** * *ஸ்பரிசம் பட்டதும் கதவு திறந்துகொண்டது .* *ஓடிவந்த ஞானம் அவனைக் கட்டிக்கொண்டாள் .* *காலையில் அவன் சொன்ன சந்தோஷ செய்திக்காக ஒரு முத்தம் தந்தாள் .* *" டேவிட் ! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் . நீ ஏன் இப்படி வாடிப்போய் இருக்கிறாய்?"* *" மாடிகளில் இறங்கி வந்தேன் . கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?"* *" விளையாடுகிறாயா? அடுத்த வாரம் வரை நம்முடைய அத்யாவசிய தேவைகளுக்கே தண்ணீர் போதுமா என நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் . பால் கொணர்கிறேன். நல்ல பிள்ளையாக சாப்பிடு."* *" சற்று நேரம் கழித்து சாப்பிடுகிறேன் . நீ இதற்கு முன் அண்ணாசாலைக்கு போயிருக்கிறாயா? "* *" சின்ன வயதில் அப்பாவின் கைகளை பற்றிக்கொண்டு, அங்கே சென்றது புகைமூட்டம் போல தெரிகிறது . தெளிவாக நினைவில்லை. நீ? "* *"கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் சுவர் ஏறிக்குதித்து நண்பர்களுடன் திருட்டுத்தனமாக ஒரு தரம் போனதோடு சரி"* *"பதினான்காம் தேதி காலையில் புறப்பட்டால் போதுமல்லவா?"* *"எதற்கும் முதல் நாள் இரவே புறப்பட்டு விடலாம்".* *"போகலாமா?" என்றாள் ஞானம் . * *கீழே வந்தார்கள்.* *கார் நகர்ந்தது.* *தாம்பரம் நுழைவாயிலில் கான்ஸ்டபிள் காரை நிறுத்தினார்.* *"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"* *"அண்ணாசாலைக்கு".* *"மவுண்ட் ரோடுக்கு செல்ல தங்களிடம் அனுமதி சீட்டு உள்ளதா?" * *சீட்டைக்காட்டினான் .* *"எனக்கு ஒரு சந்தேகம் . மவுண்ட் ரோடு அண்ணாசாலை இரண்டுமே ஒன்றுதானே?"* *"மவுண்டுரோடு என்ற பெயரை அண்ணாசாலை என மாற்றி சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது . எனினும் மிகப் பெரும்பாலோர் மவுண்ட் ரோடு என்றுதான் சொல்லுகிறார்கள்."* *"சரி டேவிட்! இப்படி ஊர்ந்தபடி போனால் நாம் எப்போது அங்கே போய் சேருவது? ம்.. இதற்குத்தான் ஒரு ஹெலிகாப்டர் வாங்கு என்று சொல்கிறேன் நீ கேட்பதாக தெரியவில்லை."* *சிரித்தான் டேவிட்.* *"எதற்கு, ஏன் இந்த சிரிப்பு?"* *"மேலே பார். புரியும்."* *போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு மேலே நிறைய ஹெலிகாப்டர்கள் நின்ற இடத்திலேயே சுழன்றுகொண்டிருந்தன . * * ******* *நடந்தார்கள் .* *"கூட்டம் அதிகம் இல்லையே டேவிட்!"* *"தினமும் அதிகபட்சம் ஐந்தாயிரம் பேர்களுக்குத்தான் அனுமதி. அதுவும் இல்லாமல், நாம் வந்திருப்பது அதிகாலை வேளை!"* *அண்ணா மேம்பாலத்தில் ஏறி இறங்கினார்கள் . * *இன்னும் சற்றுத் தொலைவுதான். * *அந்த பகுதியில் கூட்டம் அடர்த்தியாக இருந்தது .* *மெஷின்தனமாக ' கைடி' ன் குரல் ஒலித்தது .* *"அண்ணாசாலையிலேயே மிகப் பழமையான கட்டிடம் இது. 150 ஆண்டுகளுக்கு முன் கட்டியது . * *" அம்மாடியோவ் ! இவ்வளோ சின்ன கட்டிடத்தை எப்படி கட்டியிருப்பாங்க ! "* *டேவிட்டும் ஞானமும் வியப்புடன் வேடிக்கை பார்த்தார்கள்-- எல்.ஐ.சி கட்டிடத்தை ! * * ************************ * *(சுஜாதாவின் "ஓலைபட்டாசு" என்ற கதைத்தொகுப்பில் சின்னசிறிய கதை என இடம்பெற்றது )* ******************************* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopSHFpPpcDR5m0fQpeQOjVvcx3iBtuEkUpHA%2BroFPU0iw%40mail.gmail.com.
