मम योनिर्महद् ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् |
सम्भव: सर्वभूतानां ततो भवति भारत || 3||
सर्वयोनिषु कौन्तेय मूर्तय: सम्भवन्ति या: |
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रद: पिता || 4||

mama yonir mahad brahma tasmin garbhaṁ dadhāmy aham
sambhavaḥ sarva-bhūtānāṁ tato bhavati bhārata
sarva-yoniṣhu kaunteya mūrtayaḥ sambhavanti yāḥ
tāsāṁ brahma mahad yonir ahaṁ bīja-pradaḥ pitā    *BG 14.3-4*: The total
material substance, *prakṛiti*, is the womb. I impregnate it with the
individual souls, and thus all living beings are born. O son of Kunti, for
all species of life that are produced, the material nature is the womb, and
I am the seed-giving Father.
K Rajaram IRS 8924 siomilar verse exist in 3 other places on B G.

---------- Forwarded message ---------
From: 'venkat giri' via iyer123 <[email protected]>
Date: Sun, 8 Sept 2024 at 08:29
Subject: [iyer123] படித்ததில் ருச்சித்தது
To: Jambunathan Iyer <[email protected]>, Srinivasan Sridharan <
[email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, N. Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, ARR <
[email protected]>, Iyer <[email protected]>, Kerala
Iyer <[email protected]>, Chittanandam V. R. <
[email protected]>, Gopala Krishnan <[email protected]>, Venkat
Raman <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>,
Mani APS <[email protected]>



தலை எழுத்தை மாற்றிய மஹான்

சுமார் 13 ஆம் நூற்றாண்டில் கடலூரை அடுத்து உள்ள திரு வஹீந்திரபுரத்தில்
வேதாந்த தேசிகன் வாழ்ந்த காலம்.

அவ்வூரில் உள்ள ஒரு வேத பாடசாலையில்  தேவநாதன் என்ற சிறுவன் வேதம் கற்று
வந்தான்.

அவனது ஆசிரியர்கள் எவ்வளவோ பயிற்சிகள் அளித்தும், தேவ நாதனால் சரிவர வேதத்தை
உச்சரிக்க  முடியவில்லை.

ஒரு நிலையில், “தேவநாதா! பிரம்மா உன்னைப் படைக்கும் போது, உன் தலை யெழுத்தைச்
சரியாக எழுதவில்லை! உனக்குக் கல்வி அறிவே  உண்டாகாது என்றும் உன் வாயில் வேதமே
வராது என்றும் அவர் உன் தலையில் எழுதிவிட்டார் போலும்! அந்தத் தலையெழுத்தை
மாற்றுவது என்பது யாராலும்  இயலாத காரியம். எனவே இனிமேல் நாங்கள் எவ்வளவு
பயிற்சிகள் அளித்தாலும் பயனில்லை!” என்று கூறி அவனைப் பாடசாலை யிலிருந்து
வெளியேற்றி  விட்டார்கள்.

அவன் அழுது கொண்டே திருவஹீந்திர
புரத்திலுள்ள ஔஷத கிரி என்னும் மலைக்குச் சென்றான். அந்த மலைக்குமேல்
திருமால், குதிரை முகத்துடன் லக்ஷ்மி  ஹயக்ரீவராக கோயில் கொண்டுள்ளார்.

அந்த லட்சுமி, ஹயக்ரீவர் சந்நதியின் பிராகாரத்தில் அமர்ந்து கொண்டு தேவநாதன்
அழுது கொண்டிருந்தான்.

“என்  தலை யெழுத்தை மாற்ற வழியே இல்லையா?” எனப் புலம்பினான்.

அப்போது அங்கு வந்த
ஶ்ரீ வைஷ்ணவ  மஹான் வேதாந்த தேசிகன், “குழந்தாய்! ஏன் அழுகிறாய்?” என்று
அவனிடம் கேட்டார். நடந்தவற்றையெல்லாம் சொன்னான் தேவ நாதன்.  “இவ்வளவு தானே?
பிரம்மா எழுதிய தலையெழுத்தை மாற்ற வழியுள்ளது. உன்னைப் படைக்கும் போது பிரம்மா
தலை யெழுத்தைச் சரியாக எழுத வில்லை என்று  நீ சொன்னாய் அல்லவா? பிரம்மாவையே
படைத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் திருமால் என்னும் பெருமாள் .

அவருடைய அருள் இருந்தால், பிரம்மா எழுதிய  தலை யெழுத்தையே மாற்றிவிடலாம்!”
என்று அவனிடம் சொன்னார் தேசிகன்.

சிறுவன் முகத்தில் புன்னகை தவழத் தொடங்கியது. லட்சுமி ஹயக்ரீவர் சந்நதிக்கு
தேவ நாதனை அழைத்துச் சென்றார் தேசிகன்.

“உனக்குக் கல்வி அறிவு உண்டாக வேண்டுமென ஹயக்ரீவரிடம் மனதாறப் பிரார்த்தனை
செய்து கொள்!” என்று  அவனிடம் கூறினார்.

அவனும் இறைவனிடம் மனமுருகி வேண்டினான்.

 ஹயக்ரீவரைப் பார்த்து தேசிகன் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்:

 விலுப்த மூர்தன்ய லிபி க்ரமாணாம்

 ஸுரேந்த்ர சூடாபத லாலிதானாம் |

 த்வதங்க்ரி ராஜீவ ரஜ: கணானாம்

 பூயான் ப்ரஸாதோ மயி நாத பூயாத் ||

 இதன் பொருள்-

யாருடைய பாத தூளியைத் தேவர்களும் தங்கள் தலையில் தாங்க நினைக் கிறார்களோ,
யாருடைய பாத தூளி பிரம்மா எழுதிய  தலை யெழுத்தையே மாற்ற வல்லதாக இருக்கிறதோ,
அத்தகைய ஹயக்ரீவப் பெருமாளின் பாத தூளி எப்போதும் என் தலையில் இருந்து,
பிரம்மா எழுதிய  தலை யெழுத்தை மாற்றி அருளட்டும்.

அப்போது அர்ச்சகர் சிறுவனின் தலையில் ஹயக்ரீவரின் பாதுகையான சடாரியை வைத்தார்.

“இப்போது நீ பாடசாலைக்குச் செல்!” என்று சொன்னார் தேசிகன்.

மலையிலிருந்து இறங்கிப் பாட சாலைக்கு அவன் சென்றவாறே, அவனது குரு மார்கள்
அவனது  முகத்தில் புதுப் பொலிவு தென்படுவதைக் கண்டார்கள்.

அவனைப் பாட சாலையிலிருந்து விரட்டிய அவர்களே மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள்.

மறுநாள் முதல்  மிகச் சரியான ஸ்வரத்தோடும் உச்சரிப்போடும் வேதம் சொல்லத்
தொடங்கினான் தேவநாதன்.
அவனது ஆற்றலைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்.

“ தலையெழுத்து சரியில்லை”, “தலையெழுத்து சரியில்லை” என எல்லாரும் அச்
சிறுவனைப் பற்றிச் சொன்னார்களே! அந்தத் தலை யெழுத்து எப்படி மாறியது?

 ராமனின் பாதுகை யிலுள்ள தூளி பட்டவுடன் எப்படி அகலிகையின் தலையெழுத்து
மாறியதோ, அதுபோல் ஹய க்ரீவரின் பாதுகை எப்போது சிறுவனது தலையில்  பட்டதோ,
அப்போதே அவனது தலை யெழுத்தும் மாறிவிட்டது!

இவ்வாறு படைப்புக் கடவுளான பிரம்மாவையே படைத்தவராகவும், பிரம்மா எழுதிய
தலையெழுத்தையே மாற்றவல்ல வராகவும் பெருமாள் திகழ்வதால் அவர்  ‘ விஸ்வயோனி :’
என்றழைக்கப்படுகிறார்.

விஸ்வம் என்பது உலகைப் படைத்த பிரம்மாவைக் குறிக்கிறது. அந்த பிரம்மாவுக்கும்
யோனியாகத் (காரணமாக)  பெருமாள் விளங்குவதால் ‘விஸ்வயோனி:’ என்று ஸஹஸ்ர
நாமத்தின் 151-வது திருநாமம் அவரைத் துதிக்கிறது.

“ விச்வயோனயே நமஹ” என்று தினமும்  சொல்லி வரும் அன்பர்களின் தலையெழுத்தை நல்ல
விதத்தில் பெருமாள் மாற்றியருளுவார் ...🌿
Yahoo Mail: Search, organise, conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
To go to your groups page on the web, login to your gmail account and then
click on https://groups.google.com/
---
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/1009558705.3211845.1725764333968%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/1009558705.3211845.1725764333968%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopiZzG1KDxx-0oPF1zdbQ_7oy%2BpcpLzoVsFic_MRH6D1g%40mail.gmail.com.

Reply via email to